சர்வதேச சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கான கலை, கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள்









சர்வதேச சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு எமது அஷ் ஷுப்பான் நலன்புரி சங்கத்தின் மகளிர் பிரிவினால் கடந்த 01-10-2020 அன்று மிகவும் விமர்சையாக சிறுவர்களுக்கான கலை, கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள்   ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். 

அமைப்பின் பணிப்பாளர் பொறியியலாளர் MMM. மன்ஹல் அவர்களின் தலைமையில்நடைபெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்கள் , காத்தான்குடி வலய கல்வி பணிப்பாளர்

KL. கலாவுதீன் SLPS அவர்கள் மற்றும் மண்முனை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ MIM. நசீம் JP அவர்கள்,  மட் நூரானியா வித்யாலய அதிபர் MACM.  நியாஸ் BA அவர்கள் மற்றும் காத்தான்குடி- 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் தலைவர் தேசமான்ய  அல்ஹாஜ் MLY. அரபாத் ஆகியோர்  கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

மேலும்  இந் நிகழ்வில்  கலந்துகொண்ட அனைத்து சிறுவர்களுக்கும் இனிப்பு பண்டங்களுடன், சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமையும்  குறிப்பிடதக்கது.