மாபெரும் இரத்ததான நிகழ்வு-2016

















இலங்கை சனநாயக ஷோசலிச குடியரசின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் அகிலத்தின் அருட்கொடை கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் புனித பிறந்த தினத்தை கௌரவிக்கும் முகமாகவும் அஷ்-ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் தவிசாளர் கலாநிதி அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் நீண்ட ஆயுள் வேண்டியும் எமது அமைப்பினால் வருடா வருடம் ஒழுங்கு செய்யப்படும் ”நமது சகோதர உறவுகளின் உயிரைக் காக்க உதவும்” இரத்ததான நிகழ்வு 5வது வருடமாக இம்முறையும் 06-02-2016 சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் பி.ப 3..30 மணிவரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி M.I.M.அஜ்மீர் ஹாஜா நவாஸ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் அமைப்பின் தவிசாளர் கலாநிதி அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய

2015/2016ம் ஆண்டுக்கான வீட்டு திருத்த வேலை, தூய குடிநீர், மலசல கூட வசதி, வாழ்வாதாரம், மருத்துவ உதவிகளுக்கான உதவித் தொகைகள் கையளிப்பு.
















2015/2016ம் ஆண்டு எம்மால் முன்னெடுக்கப்படுகின்ற வீட்டுத் திருத்த, தூய குடி நீர் மற்றும் மலசல கூடம், வாழ்வாதாரம், மருத்துவ திட்டங்களில் முதற் கட்டமாக கடந்த 06-02-2016 அன்று 30 பயனாளிகளுக்கு சுமார் 500,000.00 ரூபா நிதி தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது.

இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட்ட பயனாளிகளின் வீட்டிலுள்ள குறைவேலைகளை இனம்கண்டு அதற்குரிய கட்டிட பொருட்களையும், தொழில் உபகரணங்களாக கோரப்பட்டுள்ள தையல் இயந்திரம் , மா அரைக்கும் இயந்திரம், பண் அரைக்கும் இயந்திரம் போன்ற பொருட்களும், மல சலகூட, தூய குடிநீர் வசதிகளும், மருத்துவத்துக்கான உதவிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத் திட்டத்தின் அடுத்த கட்டமாக