நடமாடும் சேவையும் ஆயுள்வேத மருத்துவ முகாமும்.


எமது நிறுவனம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவுடன் இணைந்து மேற்படி நிகழ்வினை 22-02-2014 சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் பி.ப 3.00 மணிவரை காத்தான்குடி-05 மட்/அல்ஹிறா மஹா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

பொது மக்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் அதிகமான மக்கள் கலந்து தமது தேவைகளை இலகுவாக நிவர்த்தி செய்ததோடு மருத்துவ சேவையினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது அப் பகுதியிலுள்ள தெரிவு செய்யப்பட்ட சுமார் 50 தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு 


மாபெரும் இரத்ததான நிகழ்வு – 2014




கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் புனித பிறந்த தினத்தை கௌரவிக்கும் முகமாகவும் அஷ்-ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் தவிசாளர் அதி சங்கைக்குரிய செய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னவர்களின் நீண்ட ஆயுள் வேண்டியும் எமது அமைப்பினால் வருடா வருடம் ஒழுங்கு செய்யப்படும் நமது சகோதர உறவுகளின் உயிரைக் காக்க உதவும் இரத்ததான நிகழ்வு 3வது வருடமாக இம்முறையும் 06-02-2014 வியாழக்கிழமை காலை 8.00 மணிமுதல் பி.ப 3..30 மணிவரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி M.I.M.அஜ்மீர் ஹாஜா நவாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அமைப்பின் தவிசாளர் சங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா டாக்டர். மௌலவீ. அல்ஹாஜ். A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ J.P அன்னவர்கள், காத்தான்குடி பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ். M.I.M. ஜெஸீம்.J.P, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் தலைவர் மௌலவீ H.M.M. இப்றாஹீம் (நத்வீ)