சிறுவர் பூங்காவும் களஞ்சியமும்.

எமது சமாதான நிகழ்ச்சித் திட்டத்தினூடாக ஆரையம்பதி நவரட்ணராசா வித்யாலய மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கிலும் உற்சாகத்துடன் கல்வி கற்கக் கூடிய சூழலை ஏற்படுத்தும் நோக்கிலும் அப் பாடசாலையிலுள்ள சிறுவர் பூங்காவினை புணரமைத்ததோடு 

சமாதான கல்வி சுற்றுலா-2013




2013ம் ஆண்டு எமது அமைப்பினால் முன்னெடுக்கப்படும் சமாதான நிகழ்ச்சித் திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வாக காத்தான்குடி ஹைறாத் வித்யாலய மாணவர்களையும் ஆரையம்பதி நவரட்ணராசா வித்யாலய மாணவர்களையும் இணைத்து எமது கல்வி அபிவிருத்திக் குழு சமாதான கல்வி சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்தது. 
இக் கல்வி சுற்றுலாவின் போது கிழக்கு பல்கலைக்கழகம், பொலனறுவை மியுசியம், பராக்கிரமபாகு சமுத்திரம், பாசிக்குடா கடற்கரை மற்றும்

மாபெரும் கலாசார நிகழ்ச்சி -2013



2013ம் ஆண்டு எமது அமைப்பினால் முன்னெடுக்கப்படும் சமாதான நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பிரிவாக இம் மாபெரும் கலாசார நிகழ்ச்சி தமிழ், முஸ்லிம் மக்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு ஆரையம்பதி நந்தகோபண் கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அஷ்-ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி MIM ஜனாப் அஜ்மீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் எமது அமைப்பின் ஆலோசகர் ஜனாப் HMM ஆசிரியர் அமீர் JP, சேவாலங்கா மன்றத்தினுடைய ஐலன்டர் நிலையத்தின்

இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு-2012



எமது அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் பெற்றோர்களை இழந்த, அதிக படிக்கின்ற பிள்ளைகளை கொண்ட குடும்பத்தையுடைய வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களை இனம் கண்டு சுமார் 1000 மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளையும் பாடசாலை உபகரணங்களையம் வழங்கி வருகின்றோம்.

அந்த அடிப்படையில் இம் முறை இந் நிகழ்வு 2012-12-26 ம் திகதி காத்தான்கடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி MIM. அஜ்மீர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

தொழில் உபகரணங்களும், நிதி உதவியும் -2012


2012ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார திட்டத்தின் மேற்படி தொழில் உபகரணங்களும் நிதி உதவியும் வழங்கப்பட்டன. 

எமக்கு கிடைத்த வேண்டுகோள் கடிதத்தின் அடிப்படையில் அவர்களின் வீடுகளுக்கு எமது அமைப்பின் திட்ட முகாமையாளரோடு ஊக்குவிப்பாளர்களும் சென்று உண்மை நிலையை கண்டறிந்து அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டன. 

மலசல கூடம் மற்றும் குடிநீர் பெறுவதற்கான உதவித்திட்டம்


2012ம் ஆண்டு எம்மால் முன்னெடுக்கப்பட்ட நீர் மற்றும் சுகாதார வேலைதிட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கான மலசலகூடம் அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன் 15 பயனாளிகளுக்கு தூய குடிநீர் பெறுவதற்கான நிதியும் வழங்கப்பட்டன.

மேற்படி திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு மேல் மலசலகூடம் இல்லாது மிகவும் கஸ்டமான சூழலிள் வாழ்ந்து வந்தவர்கள்.

வீட்டுத் திருத்த வேலைகளுக்கான பொருட்கள் கையளிப்பு -2012


2012ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார திட்டத்தின் மேற்படி தொழில் உபகரணங்களும் நிதி உதவியும் வழங்கப்பட்டன. 2012ம் ஆண்டு எம்மால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்ட செயற்பாட்டில் 55 பயனாளிகள் பயனடைந்தனர் 

இவர்களது வேண்டுகோள் கடிதம் எமக்கு கிடைக்கப்பெற்றதும் அவர்களின் வீடுகளுக்கு எமது அமைப்பின் திட்ட முகாமையாளரோடு ஊக்குவிப்பாளர்களும் சென்று உண்மை நிலையை கண்டறிந்து அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. 

தொண்டர் ஆசிரியர்களுக்கான நிதி உதவி வழங்குதல்

இனம் காணப்பட்ட பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும் போது அப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக தொண்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றமை வழமையானதாகும். 

அவ்வாறு நியமிக்கப்படுகின்ற ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்குவதற்கு போதிய நிதி அப்பாடசாலையில் இல்லாத சந்தர்பத்தில் அதனை அப்பாடசாலை அதிபர் எமக்கு தெரியப்படுத்துகின்ற போது

இறுதி கடமைகளுக்கான உதவி


எமது பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் திடீர் மரணங்கள் சம்பவிக்கும்போது அதற்கான இறுதி கடமைகளை நிறைவேற்றுவதற்கான வசதியற்றிருப்பவர்களுக்கான அவசர நிதி மற்றும் தொண்டுகளை வழங்கி உதவி புரிந்து வருகின்றது

புலமைப் பரிசில் நிதி

பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் இருந்து பல்கலைகழகம் சென்று படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூபா 2000.00 வீதம் புலமைப் பரிசில் நிதி எமது அமைப்பால் வழங்கப்படுகின்றது. 

எதிர்காலத்தில் எம்மால் புலமைப் பரிசில் நிதி பெறும் மாணவர்கள் தங்களது பட்டப்படிப்ப நிறைவுபெற்றதும் 

இலவச பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு -2012


தமிழ் முஸ்லிம் மாணவர்களிடையே சமாதானத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையிலும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளின் வழிகாட்டலுக்காகவும் காத்தான்குடி ஆரையம்பதி எல்லை பகுதியிலுள்ள தரம் 5 கல்வி கற்கும் மாணவர்களை இணைத்து அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் கல்வி அபிவிருத்திக் குழு

கௌரவிப்பு, பாராட்டு நிகழ்வுகள் -2012


தரம் ஐந்து (5) புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் தரம் பதினென்று (11) சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களையும் எமது அமைப்பு வருடந்தோரும் கௌரவித்த பராட்டி அவர்கள் தொடர்ந்து கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபடுவதற்காக ஊக்கமளித்து வருகின்றது. 


அந்த வகையில் மேற்படி நிகழ்வு 2012-02-04 அன்று காத்தான்குடி டீன் வீதியில் அமைந்துள்ள மன்பஉள் ஹைறாத் பள்ளிவாயலிள் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் கல்வி அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. 

வருடாந்த இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு





எமது அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் பெற்றோர்களை இழந்த, அதிக படிக்கின்ற பிள்ளைகளை கொண்ட குடும்பத்தையுடைய வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களை இனம் கண்டு சுமார் 1000 மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளையும் பாடசாலை உபகரணங்களையம் வழங்கி வருகின்றோம். 

அந்த அடிப்படையில் இம் முறை இந் நிகழ்வு 2011-12-25 ம் திகதி காத்தான்கடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிள் 

வருடாந்த கிரிகட் சுற்றுப் போட்டி 2012-2013





இளைஞர்களிடையே சமாதானத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தவதோடு அவர்களின் தலைமைத்துவ ஆற்றலை மேலோங்க செய்யும் நோக்கில் வருடா வருடம் எமது அமைப்பு கிரிகட் சுற்றுப் போட்டி ஒன்றை ஒழுங்கு செய்து நடாத்தி வருகின்றது. 

இதன் போது முன்னாள் இளைஞர் குழு உறுப்பினர் மர்ஹும் அஸ்அத் பர்மான் பாஸ் அவர்கள் சக இளைஞர் குழு உறுப்பினர்களால் நினைவு கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவ உதவிகள்


வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் உள்ள உறுப்பினர்கள் பாரிய நோயினால் பீடிக்கப்படுகின்ற போது அவர்களுக்கான மருத்துவத்துக்கான குறிப்பிட்டளவு நிதி உதவியினை எமது அமைப்பு வழங்கி வருகின்றது.

தொண்டார்வ சேவை


எமது அமைப்பின் கலாசார பிரிவினரும் இளைஞர் குழு உறுப்பினர்களும் சேர்ந்து காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் கட்டிட பணிகளில் தாமாக முன்வந்து தமது சேவைகளை வழங்கினர்.

இப் பள்ளிவாயல் பணி கட்டம் கட்டமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு கட்டத்திலும் எமது தொண்டர்கள் தங்களது பங்களிப்பை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹைறாத் வித்யாலயம், மையவாடி சிரமதானம் 2011-11-16



பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் மூலம் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என பலரது உயிர்கள் இழக்கப்பட்டன. இந்த அபாய சூழலிள் எமது அமைப்பின் மூலம் பல இடங்களில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.