வெள்ள அனர்த்த உதவித் திட்டம்


காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஷ்ஷுப்பான் நலன்புரிச்சங்கதினால் உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு 2011.02.05 ல் நடைபெற்றது. 

அஷ்ஷுப்பான் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி M.I அஜ்மீர் நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் றப்பானிய்யஹ் இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் றப்பானிய்யஹ் விளையாட்டு கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

றப்பானிய்யஹ் இளைஞர் கழகம் மற்றும் றப்பானிய்யஹ் விளையாட்டுக் கழகம் என்பன எமது அமைப்பின் ஒரு அங்கமாக செயற்படுவது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இத் திட்டத்தின்கீழ் சுமார் 1000 பேருக்கு வெள்ள நிவாரணமாக உலர் உணவுப் பொருட்கள் மற்றும் குடி நீர் உட்பட அன்றாட வாழ்கைக்கு தேவையான பொருட்கள் எமது அமைப்பினால் உடனடி உதவித்திட்டமாக வழங்கப்பட்டது.