எமது அமைப்பின் ஏற்ப்பாட்டில் பட்டதாரிகள் மற்றும் பல்துறை சார்ந்த நிபுணர்களை விருதுகள் வழங்கி கௌரவிக்கும் விழா காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் கடந்த 2011- 07- 29ம் திகதி நடைபெற்றது.
அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி M.I அஜ்மீர்
நவாஸ் தலைமையில் நடைபெற்ற இக் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலாநிதி அஷ் -
ஷெய்க் அல்ஹாஜ் மௌலவீ A.அப்துர்
ரஊப் (மிஸ்பாஹீ) அவர்களும் மற்றும் அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்
அரபு கல்லூரியின்
அதிபரும் பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலின் தலைவருமான மௌலவீ H.M.M
இப்றாஹீம் (நத்வீ), அல்ஜாமிஅதுர் றப்பபானிய்யஹ் அரபு கல்லூரியின் சிரேஷ்ட
விரிவுரையாளர் மௌலவீ M.M.A மஜீத் (றப்பானி), காத்தான்குடி பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ் M.I.M.
ஜெஸீம் J.P உட்பட அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள் மற்றும்
கல்விமான்கள், உலமாக்கள்,
பிரமுகர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந் நிகழ்வின் போது ஐம்பதுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள்
மற்றும் பல்துறை சார்ந்த நிபுணர்கள் கௌரவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும்
அவர்கள் மக்களுக்கு புரிந்துவரும் சேவைகளுக்காக கௌரவ விருது வழங்கப்பட்டது.