இரத்தான நிகழ்வு-2013


கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மீலாத் தினத்தை முன்னிட்டும் அதிசங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா மௌலவீ அல்ஹாஜ் A..அப்துர் ரஊப் (மிஸ்பாஹீ) அவர்களின் நீடிய வாழ்நாள் வேண்டியும் வருடாவருடம் அஷுப்பான் நலன்புரிச் சங்கமும் றப்பானிய்யஹ் இளைஞர் கழகமும் இணைந்து நடாத்தும் சகோதர உறவுகளின் உயிர் காக்க உதவும் இரத்த தான நிகழ்வு இவ்வருடமும்  26-01-2013 சனிக்கிழமை காத்தான்குடி 05  பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்க பணிப்பாளர் சட்டத்தரணி M.I. அஜ்மீர் தலைமையில் காலை 8.00 மணி தொடக்கம் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வில் அஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் தவிசாளர் சங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா டாக்டர். மௌலவீ. அல்ஹாஜ். A.அப்துர் றஊப் (மிஸ்பாஹீ)  J.P, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் தலைவர்

வெள்ள அனர்த்த உதவித் திட்டம்


காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஷ்ஷுப்பான் நலன்புரிச்சங்கதினால் உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு 2011.02.05 ல் நடைபெற்றது. 

அஷ்ஷுப்பான் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி M.I அஜ்மீர் நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் றப்பானிய்யஹ் இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் றப்பானிய்யஹ் விளையாட்டு கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விருது வழங்கும் விழா 2011














எமது அமைப்பின் ஏற்ப்பாட்டில் பட்டதாரிகள் மற்றும் பல்துறை சார்ந்த நிபுணர்களை விருதுகள் வழங்கி கௌரவிக்கும் விழா காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் கடந்த 2011- 07- 29ம் திகதி நடைபெற்றது.

அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி M.I அஜ்மீர் நவாஸ் தலைமையில் நடைபெற்ற இக் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலாநிதி அஷ் - ஷெய்க் அல்ஹாஜ் மௌலவீ A.அப்துர் ரஊப் (மிஸ்பாஹீ) அவர்களும் மற்றும் அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அரபு கல்லூரியின்